வாழ்க வாழ்கவே நீடு - நிலைத்து ஓங்கவே வானை போல நிலவை போல என்றும் கலைகள் பயிலவே நாளும் நாங்கள் நாடி வரும் கலாசாலையே ஸ்பிரிங்வெளி தமிழ் கல்லூரி வாழ்க வாழ்கவே என்றும் வாழ்க வாழ்கவே நீடு நிலைத்து ஓங்கவே...
வசந்தம் தவழும் வயலும் மலையும் வாழ்த்துப் பாடுமே நிசப்தமான நிலையில் அலைகள் ஓடித் தவழுமே ii கல்வி பயில கற்று ஒழுக கமலவாணியே….! ii கலைகள் மலர்ந்து கல்வி வளர அருள்வாய் தேவியே
மாணவர்கள் நாளை உலகில் ஜீவநாடிகள் மலரும் புதிய உலகை நோக்கும் வானம்பாடிகள் ii பேணி வளர்க்கும் பெற்றவர்கள் பெருமைகொள்ளவே ஞானம் வழங்கும் ஆசிரியர்நன்று வாழ்கவே ஞானம் வழங்கும் ஆசிரியர் நல்வழி தரவே
இயற்றியவர் திரு.M.முத்துக்கருப்பன் (பாடசாலை முன்னாள் அதிபர்)